முதலில் காலை நீட்டி உட்கார்ந்து கொள்ளவேண்டும். பின்னர் வலது காலை
மேல் நோக்கி தூக்க வேண்டும். அப்போது வலது காலின் பாதத்தை வலது கையை கொண்டு
பிடித்து கொள்ள வேண்டும். இதே போல் இடது காலை இடது பக்கமாக மேல் நோக்கி
தூக்க வேண்டும். இடது கையைக் கொண்டு இடது கால் பாதத்தை பிடித்துக் கொள்ள
வேண்டும்.
தலையில் இருந்து முதுகுத தண்டு வடம் வரை
நேராக இருக்க வேண்டும். கால்களில் முட்டியோ, கைகளின் முட்டியோ மடங்கி
விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தான் காகா ஆசனத்தை செய்யும் முறை
ஆகும். படத்தில் உள்ளது போன்று இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். அப்போது
மூச்சு சாதாரண நிலையில் இருப்பது முக்கியம்.
10
முதல் 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். அதன் பின்னர் ஆழ்ந்து
சுவாசித்துக் கொள்ள வேண்டும். மூல வியாதியை கட்டுப்படுத்த காகா ஆசனப்
பயிற்சி உதவுகிறது. இது ஒரு சிறந்த ஆசனம் ஆகும. மலச்சிக்கல், வயிற்று
கோளாறு உள்ளிட்ட வியாதிகளை சரி செய்ய உதவுகிறது.
No comments:
Post a Comment